நூர்- நூல் விமர்சனம்

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதம் பிடிக்கும் எனக்கு தாமதம் பிடிக்கும்” என்பது கண்ணதாசன் வாக்கு. இந்த நூலை எழுதிய தம்பி நூருல் ஹசனுக்கும் தாமதம் மேல் பெருங்காதல் ஏற்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன். நாகூரில் பிறந்த நூருல் ஹசன் இஸ்லாமிய வழிமுறைகளை தீர்க்கமாக கடைப்பிடிக்கும் …

நூர்- நூல் விமர்சனம் Read More

புருஷவேட்டை- நூல் விமர்சனம்

முதல்முறை புத்தகம் வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு நான் பாலகுமாரன், வைரமுத்து ஆகியோரை பரிந்துரைப்பேன். இப்போது இந்திரா செளந்தர்ராஜன் அய்யாவையும் அந்த வரிசையில் சேர்க்கணும். கதைகளில் அத்தனை எளிமை! கூடவே விக்ரமன் படம் போன்ற க்ளைமாக்ஸ்! இந்த நூலில் இரண்டு குறுநாவல் இருக்கிறது …

புருஷவேட்டை- நூல் விமர்சனம் Read More

சாகாவரம்- நூல் விமர்சனம்

சாகாவரம் நாவலைப்பற்றி பேசும் முன் ஒரு உண்மைச் சம்பவம். எங்க ஊர்ல வைத்திமாமான்னு ஒருத்தர் உண்டு. நிறைய தடவ அவரப்பத்தி எழுதிருக்கேன். எவ்வளவு எழுதுனாலும் முழுசா எழுதித்தீக்க முடியாத விசய ஞானம் கொண்ட மனுசன் அவரு. நிலையாமைய பத்தி வள்ளுவர விட …

சாகாவரம்- நூல் விமர்சனம் Read More

அசுரன்- நூல் விமர்சனம்

அசுரன் ராவணன் வீழ்ந்த கதையை, “வீழ்த்தப்பட்ட கதை” என்ற போக்கில் சொல்லியுள்ளார் ஆனந்த் நீலகண்டன் தன் தகப்பனின் இன்னொரு தாய்க்கு பிறந்த குபேரனிடம் கையேந்தி நிற்கும் நிலை ராவணனுக்கு. தன் சகோதர்கள், தாய் தங்கையோடு அப்படியாக இழிநிலையோடு நிற்கிறான் ராவணன். பின் …

அசுரன்- நூல் விமர்சனம் Read More

ஆட்டம்- நூல் விமர்சனம்

காமம் குறித்து சு. வேணுகோபால் எழுதுகிறார், 👇 “அறிவைப் பிய்த்தெறிந்து விட்டு உடலை மட்டும் உருவி இழுத்துச் சுழற்றும் மாயச்சுழல் அது இல்லை. நினைப்பில் தோன்றி அறிவில் வேர்கொண்டு கற்பனையில் கிளைத்துத் தழைத்துப் பெருகும் பெரு மரம் அது” வடிவேல் சிறந்த …

ஆட்டம்- நூல் விமர்சனம் Read More

என்னுடைய போதி மரங்கள்- நூல் விமர்சனம்

மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் கவிதை நூலுக்கு அடிமையாய் இருந்த காலம் ஒன்றுண்டு. இப்பவும் அந்த நூல்மேல் அதேயளவு காதல் உண்டு. சமீபத்தில் புதியபடம் ஒன்றுக்காக பாடல் எழுதும் பணியில் இசைஞர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மு.மேத்தா பாடல் வரிகளை …

என்னுடைய போதி மரங்கள்- நூல் விமர்சனம் Read More

ஆகாயம் காணாத நட்சத்திரம்- நூல் விமர்சனம்

இலக்கிய இளைப்பாறுதல். தீவிரமான நூல்களை வாசித்து வந்ததால் சின்னதாக ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வென்றால் வாசிப்பிற்கு அல்ல. வாசிப்பிலே ஒரு ஓய்வு. அதனால் அய்யா இந்திர செளந்தர்ராஜனை தேர்ந்தெடுத்தேன். இண்டு பேப்பர், விகடன் இதழ், பில்டர் காபி, வாங்கோ போங்கோ உரையாடல் என …

ஆகாயம் காணாத நட்சத்திரம்- நூல் விமர்சனம் Read More

மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள் – நூல் விமர்சனம்

மரண தண்டனையை பரிசீலிக்கச் சொல்லும் நாவல். ஒரு மரண தண்டனை கைதியின் மனதைத் தடவிப்பார்த்து எழுதியுள்ளார் விக்தோர் ஹ்யூகா. அந்தக் கைதி என்ன குற்றம் செய்து சிறைக்கு வந்தான் என்ற செய்தியை விட, மரண தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு அவன் மனது …

மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள் – நூல் விமர்சனம் Read More

வாழ்வின் தாள முடியா மென்மை- நூல் விமர்சனம்

நண்பரும் எழுத்தாளருமான செந்தில் ஜெகன் நாதன் பரிந்துரைத்த மற்றொரு மாஸ்டர் பீஸ் இந்த நாவல். கதையில் சோவியத் செக்கோஸ்லோவேகியா மீதி படையெடுக்கும் காலம் வருகிறது. (1968) அக்காலத்தில் தேரேசா, தாம்ஸின் ஜோடியின் வாழ்வும் தாழ்வும் வருகிறது. கூடவே சபினா, ப்ரான்ஸ் ஆகியோரின் …

வாழ்வின் தாள முடியா மென்மை- நூல் விமர்சனம் Read More

பெண் ஏன் அடிமையானாள்- நூல் விமர்சனம்

15 வருடங்களுக்கு முன்பு ஒருமுறையும் எட்டு வருடங்களுக்கு முன் மறுமுறையும் என இருமுறை இந்த நூலை வாசித்துள்ளேன். இது மூன்றாம் முறை. “பெண்களின் பொருளாதார சுதந்திரம் தான் அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்க உதவும் வழி” என்ற பெரியாரின் கூற்று இன்று உறுதியாகியுள்ளது. …

பெண் ஏன் அடிமையானாள்- நூல் விமர்சனம் Read More