அடர்ந்த இரவில் மலை மீது அமர்ந்து மேகங்களை காணும் போது,.மேகங்கள் கேக் வடிவமெடுத்து கிறிஸ்துமஸுக்கு தயார் ஆகிறது. ப்ளம் கேக் கவிதையில் இப்படியொரு காட்சி. ஒரு வரிக்குள் ஒரு காட்சி என நிறைய கவிதைகள் காட்சிகளின் அடர்த்தியைக் கொண்டிருந்தன
/அதே கோவில்
கருவறை முன்பு நின்றோம்
முன்பு போல் எதையும் வேண்டிக்கொள்ள வில்லை
விலகி வருகிறோம்
ஆனாலும் இருக்கிறோம் பிரகாரத்தினுள்
நீயொரு தூணிலும்
நானொரு தூணிலும்
சாய்ந்தபடி அமர்ந்தோம்
அமைதியாக இருக்கிறது/
இப்போதெல்லாம் நாம் காதலைச் சொல்லிக்கொள்வதில்லை என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கவிதை ஒரு இரவின் உறக்கத்தை தனதாக்கிக்கொண்டது
/மலர் மலர்ந்து அறிகிறது
தனக்குள் இருந்தது வானமென/ Love it
நல்ல நல்ல சொல்லாட்சி கொண்ட ப்ளம்கேக் நல்ல வாசிப்பனுவத்தை தரும்
இதுவும் செந்தில் ஜெகன் நாதன் பரிந்துரைத்த நூல் தான்😎

