உடலுறவில் உச்சம் – நூல் விமர்சனம்

உடலுறவு நூல்கள் சில வாசித்திருந்தாலும் என் டாப் லிஸ்டில் இருப்பது காமசூத்திரம், தந்த்ரா வழியில் தாம்பத்யம் என்ற இரு நூல்கள் தான்.
பொசிசன் மட்டும் சொல்லி நம்மை உசுப்பேத்தாமல், இணையை மன ரீதியாகவும், யோகா ரீதியாகவும் அணுகச்சொல்லும் அந்த நூல்கள்

தனக்கு மன தடுமாற்றம் இருக்கிறது என்பதை ஒருவர் உணர ஆரம்பித்தாலே அவர் வெற்றிக்கான ஆயுதத்தை கைப்பற்றிவிட்டார் என்று பொருள். இங்கு நிறைய மனிதர்களுக்கு மனதடுமாற்றம் இருப்பதே தெரிவதில்லை. செக்ஸில் குற்றவுணர்வை நீக்குதலும், வெட்கத்தை துறத்தலும், தாழ்வுமனப்பான்மையை மாற்றுவதும் மன தடுமாற்றத்தை மாற்றும். உடலின்பத்திற்கு மனம் தான் சிறந்த உறுப்பு என்பதையும் உணர்தல் நலம்

இன்பத்தை முழுமையாக அனுபவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்று டாக்டர் காமராஜ், ஜெயராணி தம்பதிகள் எடுத்துரைக்கின்றனர். இன்றைய காலகட்டத்திற்கு உடல் பற்றியும், உறவு கொள்ளுதல் பற்றியும், உச்சக்கட்டம் பற்றியும் மேக்சிமம் எல்லாருக்கும் புரிதல் வந்துவிட்டது. இப்படிச் செய், அப்படிச் செய் என அறிவுறுத்தும் நூல்கள் இனி பெரிதாக தேவை இருக்காது தான்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் எது ஜி.ஸ்பாட் என்பது வரை இப்போதுள்ள தலைமுறை தெளிவு கொண்டுள்ளனர். பின் ஏன் இப்படியான நூல்? எனக்கொண்டால், மருத்துவமும் அறிவியலும் அறிந்த படித்த வல்லுனர்கள், சற்று உளவியல் சார்ந்தும் sex life-ஐ சொல்லும் போது ஆண்கள்/ பெண்கள் தாழ்வுமனப்பான்மை மற்றும் குற்றவுணர்ச்சியில் இருந்து வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

பொதுமையான செக்ஸைத் தாண்டித்தான் இன்று ஒருமைக்குள் வந்துள்ளது மனித இனம். ஒருமையின் உண்மை பொருளை அறிய உடலறிதல் முக்கியம் என்கிறது நூல். எழுத்து நடையும் கருத்துச் செறிவும் ஓரளவு தரமாக அமைந்துள்ளது. இந்நூலில் கொக்கோகம் என்ற காமநூலை பரிந்துரைத்துள்ளனர். வருங்காலங்களில் அதை வாசிக்க வேண்டும்

நிறைவாக…

காமத்தில் நிறைதல் என்பது நிறைவேற்றுவதில் தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *