“ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்ற புத்தரின் போதனையை புத்திக்கு ஏற்றுகிறார் கார்மேனி செல்வம்
கார் டிரைவராக தன் மனைவி மகனோடு எளிமையான வாழ்வை வாழ்ந்து வரும் சமுத்திரக்கனி நாமும் பணக்கார வாழ்வை வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆசையின் அளவில் எதார்த்தம் நிறைந்திருந்தால் பெருந்துன்பம் நேராது. ஆசையின் அளவு எதார்தத்தை மிஞ்சும் போது வாழ்வும் நம்மை சூனியமாக்கி விடுகிறது. தன் தேவைகளைப் பற்றி யோசிக்காமல், தன் ஆசைகளை நோக்கிப்பயணப்படுகிறார் சமுத்திரக்கனி. அதனால் கடன்களை வாங்கிக்குவிக்கிறார். அதுவே அவர் வாழ்வில் சிக்கலாக மாறுகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை
சில கேரக்டர்களுக்கு இவரை விட்டால் வேற ஆளில்லை என்போம் அல்லவா! அந்த கேட்டகிரியிலுள்ள நடிகர் சமுத்திரக்கனி. அப்படியான சாமுத்திரிகா லட்சணத்தோடு இக்கேரக்டரில் நடித்து சிறப்பு செய்துள்ளார். அவரது மனைவியாக வரும் லெட்சுமி பிரியா சந்திரமெளலி அழகாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தலைவியின் மனநிலையை நம் கண்முன் நிறுத்தியுள்ளார். கரன் சக்ரவர்த்தி, கெளதம் வாசுதேவ் மேனென், அபிநயா உள்ளிட்ட ஏனைய கேரக்டர்களும் படத்தின் பில்லர்களாக உதவியுள்ளனர்
இசை படத்தின் ஆன்மாவாக ஆங்காங்கே ஒலித்துள்ளது. இசை பொறுப்பை Music as a service musicloud studio & technology மூலம் செய்துள்ளனர். சிறப்பு. ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன் திரைக்கதையின் எதார்த்தம் மீறாத வகையில் ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார் Good move அது
இயக்குநர் ராம் சக்ரி, நாம் பாடம் எடுக்க வேண்டும். ஆனால் அதை நல்ல படமாகவும் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அந்த நினைப்பு தான் அவரை கமர்சியல் அம்சங்களோடு படத்தை நகர்த்த வைத்துள்ளது. சிற்சில செயற்கை அம்சங்களும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் நடுத்தர குடும்பங்களுக்கு தேவையான ஒரு மெசேஜை பாஸ் செய்திருப்பதால், இந்த கார்மேனி செல்வத்தை நாம் மாஸ் ஆக்காவிட்டாலும், பாஸ் ஆக்கவேண்டும்
3/5
-வெண்பா தமிழ்

