யாரையும் மிஸ் பண்ணாமல் நன்றி சொன்ன சூரி

சென்றவாரம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் படம் மண்டாடி. இப்படத்தின் வெற்றிவிழா பெரு விருந்தோடு நேற்று நடைபெற்றது. வெற்றிவிழாவில் நடிகர் சூரி பேசும்போது,

“எங்கள் படக்குழுவின் சார்பாக இந்த ‘மண்டாடி’ படத்தைத் தன்னுடைய படைப்பாக ஏற்றுக் கொண்டு கொண்டாடி வரும் உலகம் முழுதும் இருக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி.அப்படித்தான் இன்று இதைக் கொண்டாடி வருகிறார்கள்.அவர்களுக்கு எங்கள் படக்குழுவின் சார்பில் நன்றி.
பல்வேறு வகையிலும் மண்டாடி படத்தைக் கொண்டாடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படி ஒரு படைப்பை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்துக்கும் எல்ரெட் குமார் அண்ணனுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணே.அதே நேரத்தில இந்த படைப்பை மிக நேர்த்தியாகவும் உணர்வு பூர்வமாகவும் சிறந்த திரைப்படமாகவும் உருவாக்கியமதிமாறன் அண்ணனுக்கு ரொம்ப ரொம்ப நன்றிண்ணே.
’நீ ஜெயிச்சிட்ட மாறா’ அப்படிங்கிற மாதிரி’ நீங்க ஜெயிச்சிட்டீங்க மதிமாறா’ அப்படித்தான் இருக்குண்ணே.
இந்தக் கதையைச் சொல்லி முடிச்ச உடனே நீங்க என்கிட்ட சொன்ன போது இந்த முத்துக்காளி இதுதான், 20 வருஷம் அவன் வாழ்க்கையில்இழந்து விட்டு வந்ததற்குப்பிறகு வந்து 20 வருஷத்துக்கு அப்புறம் திருப்பி அவன் அந்த ஊருக்குள் வந்தால் அவன் எப்படி இருப்பான்? அவன் மனநிலை எப்படி இருக்கும்?ஒருத்தர் அவனைக் கூப்பிட்டால் கூட அவன் எப்படித் திரும்புவான்?அவன் எப்படி உட்காருவான்? அவனுடைய நடவடிக்கை எப்படி இருக்கும்? அவனுக்கு பிடிக்காத விஷயங்கள் பழையதை ஞாபகப்படுத்துற மாதிரி ஒரு விஷயத்தை சின்னவிஷயத்தைச் சொன்னால் கூட அவனைக் கோபப்படுத்துகிற மாதிரி இருக்கும்.அதைத் தொட்டால் அவன் எப்படி வெளிப்படுத்துவான் என்பதெல்லாம் நீங்கள் என்னிடம் தெளிவாகக் கூறினீர்கள்.அதைத்தான் நானும் நண்பர்களும் ஒரு வாரமாக யோசித்துக் கொண்டே இருந்தோம்.இதை என்ன மாதிரிச் செய்யலாம் என்ன மாதிரிச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

ஒருத்தன் பாறையை முழுங்கிட்டு இருந்தான்னா எப்படி இருப்பான்? அவன் எப்படி நடமாடுவான்? அவனைப் போய் ஒரு கட்டத்துக்கு அப்புறம் அவனைச் சீண்டினால் அவன் எப்படிவெளிப்படுத்துவான்? அந்த மாதிரி யோசித்துக்கொண்டேடே இருந்தேன். இயக்குநருடன் கலந்து பேசினேன், விவாதம் செய்தேன்.அப்போது அண்ணன் சொன்னார் இதுதான் நான் எதிர்பார்க்கிறேன். அப்படி இந்த கேரக்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.நீங்க சொன்னது இன்றைக்கு எல்லாரும் என்னை சூரியோட நடிப்பு சூப்பர் என்று சொல்லும் போது முத்துக்காளியாக மதிமாறனாக என் கண்ணுக்குத் தெரிகிறார்கள்.ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணே.
ஆந்திரா சென்றபோது அவர்கள், எங்கள் சுஹாஸ் அண்ணாவை நீங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றுள்ளது மிக்க நன்றி.
பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உங்களுக்கு எனது ராயல் சல்யூட். மண்டாடியை அப்படியே உங்களிடம் கொடுத்துவிட்டார்கள்.ஏதாவது தவறுதலாகப் பேசி இருந்தால் மன்னிக்கவும்.இந்தப் படத்துக்காக மாஸ்டரின் மகன் கிரண் 20 நாள் சிரமப்பட்டு இருக்கிறார்.அப்படித்தான் அசால் மாஸ்டரும் மண்டாடி பாடல் எடுத்த போது நடுக்கடலில் ஆட்கள் இல்லாத போது எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை மறக்கவே முடியாது. யாருமே இல்லாமல் நடிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு சிரமப்பட்டார் .

முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து வாழ்த்து வந்தது.அதை மறக்கவே முடியாது.
படம் பார்த்துவிட்டு சரத்குமார் சார் இரவு ஒரு மணிக்கு போன் செய்தார் .படத்தில் நான் மஹிமாவிடம் மன்னிப்பு வாங்கும் காட்சியைப் பார்த்து விட்டு அவரும் கண் கலங்கியதாகச் சொன்னார்.நெப்போலியன் சார் அமெரிக்காவில் இருந்து போன் செய்தார். பார்த்திபன் சாரும் போன் செய்து வாழ்த்தினார். சீயான் விக்ரம் சார் வாழ்த்து சொல்லி விட்டுப் பத்து நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றார்.அப்படியே எனக்கு வாழ்த்து சொன்ன
கார்த்தி சார், எஸ்டிஆர் சிலம்பரசன் சகோ ,தம்பி எஸ் கே ,நண்பர் விமல், நானி பிரதர் ,ஆர் ஜே பாலாஜி பிரதர், சிறுத்தை சிவா சார் ,தாணு சார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி.

கேமராமேன் கதிர் சார் எங்களுடைய இன்னொரு கதாநாயகன் .உங்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் ஜீவி அவர்களுக்கு மிக மிக நன்றி.படகுகள் ஏற்பாடுகள் செய்த சொக்கலிங்க முதலாளிக்கு நன்றி.இப்படியே ஆனால் யார் பெயரையாவது மறந்து விடுவேனோ என்று எனக்கே பயமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சொன்னார் ,”இதற்கு மேல் நாம் இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டியதில்லை, மக்களே கொண்டு சேர்ப்பார்கள் ”என்றார் .அவர் சொன்னபடியே மக்களே இதைக் கொண்டாடுகிறார்கள்.’மண்டாடி ‘சம்பந்தமாக ஆயிரக்கணக்கான ரீல்ஸ்கள் போட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.மனம் நிறைவாக இருக்கிறது.அனைவருக்கும் நன்றி.

சூரி எப்போதும் இப்படியே இருப்பேன். சூரி இனி போன் எடுக்க வேண்டும் என்றார்கள் .எனக்கு எப்போதும் நான் மேனேஜர் வைத்துக் கொள்வதில்லை.அன்புத் தம்பி உதயசங்கர் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்

.அனைவருக்கும் நன்றி வணக்கம்!” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *