வரும் நாட்களில் வெளியாகவிருக்கும் தமிழ் ஃபீல் குட் ரொமான்டிக் கிளாசிக் திரைப்படமான *சிட்டுக்குறிஞ்சி* படத்தின் முதல் பாடலான *குறிஞ்சி மலை மேல* பாடல் யூடியூபில் 15 லட்சம் பார்வைகளை கடந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
உற்சாகம் நிறைந்த திருமணப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். பாடலுக்கு கு. கார்த்திக் வரிகள் எழுதியுள்ள நிலையில், அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார்.
பிளாக் அண்ட் ஒய்ட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் *சிட்டுக்குறிஞ்சி*, காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்களை வித்தியாசமான முறையில் இணைத்து உருவாகி வருவதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்டப் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ள *சிட்டுக்குறிஞ்சி*, காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்த புதுமையான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இப்படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடிக்க, தீப்ஷிகா மற்றும் நக்ஷா சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
*சிட்டுக்குறிஞ்சி* படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, 1983-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட காலகட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலகட்டத்தின் வாழ்வியலையும் சூழலையும் தத்ரூபமாகக் கொண்டுவருவதற்காக, கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமத்து செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
மேலும், படத்தின் இசை அனுபவத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், பின்னணி இசைக்கான பதிவுகள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்ற லைவ் ஆர்கெஸ்ட்ரா மூலம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் அமைந்துள்ள Budapest Scoring Company ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன
*சிட்டுக்குறிஞ்சி* மூலம் இசையமைப்பாளராக மாறா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ . ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ராம்ஜி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

