ஜோதி இனி பிரகாசமாக இருக்கும் – இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்;

“பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா டாரா” வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இவ் விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது,

இயக்குனர் ஜோதி கிருஷ்ணா பேசியபோது,

நான் இந்த படம் வைக்கப் பிறகு நான்கு வருடங்களாக தமிழ்நாட்டிற்கு வரவே இல்லை தமிழ் சினிமாவில் நான் மீண்டும் படம் இயக்குவேனா என்று சந்தேகமாக இருந்தது மேலும் இங்கு இருக்கும் பத்திரிகை யாளர்கள் சீமத்துறையில் இருப்பவர்கள் அனைவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள் அவர்களையும் நான்காண்டுகளுக்கு பிறகு இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி.

ஹர ஹர வீர மல்லு படத்தை இயக்கும்போது இவ்வளவு பெரிய ஃபேன் இந்தியா படமாக வரும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை.

எனக்கு முன்பு என்னுடைய அப்பா பேசினார். நான் சுமார் 8 வருட காலம் படத்தை இயக்காமல் இருந்தேன். அதற்கு காரணம் அஜித் சார் என்னிடம் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை, அவரை கவனித்துக் கொள்ளுங்கள். தயாரிப்பு வேலைகளை பாருங்கள் அது உங்களுக்கு நன்றாக வரும் என்று சொன்னார். எவ்வளவு பெரிய ஸ்டார் நம்மைப் பற்றியும் நமது அப்பாவை பற்றியும் சிந்திக்கிறார் என்று அன்றோடு இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆனால் நான் தயாரிக்க வேண்டும் என்றால் அடுத்தடுத்து படங்கள் வேண்டும் என்றேன். நான் நடிக்கிறேன் என்று தொடர்ந்து மூன்று படங்கள் கொடுத்தார், ஆரம்பம், என்னை அறிந்தால் மற்றும் வேதாளம். ஆனால், இதன் பிறகு அவர் சூர்யா மூவிஸ் மூவிஸ்க்கு நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனாலும், அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதை காப்பாற்றுவார்.

எட்டு வருடங்கள் கழித்து பவன் சாலை சந்தித்தேன் அவர் என்னிடம் எனக்கு ரத்தினம் சாரி ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீ என்ன செய்வாய் என்று எனக்கு தெரியாது எப்படியாவது இந்த படத்தை வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்று கூறினர். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் என் மீதும் அப்பா மீதும் வைத்திருக்கும் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயம் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காக நாம் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பவன் கல்யாண் சார் மிகவும் புத்திசாலி தனிப்பட்ட இயக்குனரும் கூட. அவர் அரசியல் பொது சேவையில் ஈடுபட்டதால் அவருக்கு இயக்குவதற்கான போதுமான நேரம் இல்லை ஆனால் இந்த படத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்று கடினமாக உழைத்து இருக்கிறார். நீங்கள் பார்த்த அசுரனா சாங் பாடலை அவரே நடனம் மற்றும் சண்டை காட்சிகளை இயக்கினார். சண்டை காட்சிகள் மட்டுமே 60 நாட்கள் எடுத்திருக்கிறோம்.

பாவன் சாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். அதை வைத்து இந்த படத்தில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார். இந்த படம் 16ஆம் நூற்றாண்டு முகலாயப் பேரரசு ஔரங்கசீப்பின் காலகட்டத்தில் நடக்கும் கதை. பாபிடியோல் ஔரங்கசீப்பாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் கதையை எழுதும்போது ஔரங்கசீப் என்ன சொல்ல வருகிறார் இந்த என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அஜந்தா எல்லோரா போன்ற சுற்றுலா இடங்களை பார்வையிட்ட ஒரு குழுவினரை நிறைச்சவ சந்திக்க நேர்ந்தது அவர்கள் திடீரென்று அவுரங்கசீப்பை திட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது மிகவும் இணையாக இருந்ததால் அவர்களிடம் பேசினேன் அப்போது அஜந்தா எல்லோரா போன்ற இடங்களில் எவ்வளவு சிற்பக் கலைகளை வடித்து வைத்திருக்கிறார்கள் அதை இப்போது அழித்து வருகிறார்கள் வருங்கால சந்ததியர்களுக்கு இதுபோன்ற சிற்பக்கலை இருந்தது தெரியவே கூடாத வகையில் அழைத்து வருகிறார்கள் என்று கூறினார்கள். அந்த ஒரு சின்ன பொறி தான் இப்படத்தை உருவாக்கியது. பவன் கல்யாண் சார் நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிக்கக் கூடாது என்பதற்காக எவ்வாறு போராடுகிறார் என்பதை படத்தின் கதை.

இந்த கதை எழுதி இரண்டு வருடங்களுக்குப் பிறகு பவன் கல்யாண் சார் துணை முதலமைச்சர் ஆகிறார். அப்போது திருப்பதி சம்பவத்தில் சனாதன தர்மத்தை நிலை நாட்ட குரல் கொடுக்கிறார். இந்த படமும் சனாதன தர்மத்தை நிலை நாட்ட கூடிய ஒரு படம் தான்.

அவன் சாரி பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் யாராவது ஒருவர் பிரச்சனையோடு வந்தால் மற்றவர் பிரச்சனையை தன் பிரச்சினையாக பார்த்து அதை தீர்ப்பார். படப்பிடிப்பு இருக்கும்போது அரசியல் சேவைகளையும் பார்த்துக் கொண்டு இடைவிடாமல் நடித்து விட்டு செல்வார்.

அடுத்து, நான் எப்படி உயர்ந்த தரத்தில் ஒரு படத்தை நினைப்பேனோ அதேபோலத்தான் வருணும். ஒவ்வொரு காட்சிகளையும் 5 கேமராவை வைத்து படம் பிடித்தோம். இந்தியாவில் உலகத்தில் உள்ள அனைத்து கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தையும் இதில் பயன்படுத்தி இருக்கிறார் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் வரும்போது இந்த தொழில்நுட்ப வேலைகளுக்காக தான் இவ்வளவு வருடங்கள் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் கடைசி 15 நிமிடங்கள் யாரும் இதுவரை எதிர்பார்க்காத காட்சிகளாக இருக்கும்.

நிதி அகர்வால் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்கும் போது சிறிது பதட்டமாக இருந்தால் ஆனால் ஒரு காட்சியில் இவர் எதிர்பாராத விதமாக நிஜகத்தியை வைக்கும் போது பயந்துவிட்டார் அந்த காட்சி படத்தில் யதார்த்தமாக அற்புதமாக வந்திருக்கிறது.நாசர் சாருக்கு நன்றி சத்தியராஜ் சாருக்கும் நன்றி நான் சத்யராஜ் சாருடைய மிகப்பெரிய ரசிகன் அவர் எம்ஜிஆர் மாதிரி நடிக்கும் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நான் எப்போதும் கதாநாயகனாக தான் பார்ப்பேன். சோபி அருமையாக நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

கீரவாணி சாரிடம் ஒரு பாடலை எழுதி அதற்கு அவர் இசையமைப்பாரா என்று தயங்கினேன். அவர் பார்த்ததுமே மிகவும் அருமையாக இருக்கிறது என்று இசையமைத்தார். மேலும் அந்த பாடலை பவன் சார் பாடினால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்டார். இதைக் கேட்டதும் பவன் சாரும் ஆர்வம் ஆகிவிட்டார். ஆனால், இவர் விஜயவாடாவிலும் அவர் ஹைதராபாதிலும் இருந்தார்கள். உடனே தன்னுடைய குழுக்களை அழைத்து விஜயவாடாவிற்கு சென்று பவன் கல்யாண் சாரை நேரலையில் பாட வைத்து பதிவு செய்தார்.

தோட்டதரணி சார் இந்த வயதிலும் ஆர்வமாக உழைப்பதே பார்க்கும்போது சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிந்தது. ஆனால், இப்போது இருக்கும் தலைமுறையினர் 25% கூட வேலை செய்வதில்லை.

ஜூன் 12ஆம் தேதி படம் வெளியாகிறது. அதற்கு பிறகு இந்தியாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இந்த படம் வெளியானதும் விரைவில் இதனுடைய 2ஆம் பாகமும் வெளியாகும்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியபோது,

அனைவருக்கும் வணக்கம், இப்படம் 5 வருடங்கள் காத்திருந்து பவன் கல்யாண் அவர்கள் துணை முதலமைச்சரான பின்பு வெளியாகிறது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும். ரத்னம் சார் அவர்கள் விஜய், அஜித்துடன் மூன்று படங்கள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஒரே ஆண்டில் நான் 3 படங்கள் இயக்கியுள்ளேன். நட்புக்காக படத்தில் மட்டுமல்லாமல், படையப்பா படத்திலும் ஜோதி கிருஷ்ணா அவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அந்த காலம் வேறு, இப்போது நிறைய மாறியுள்ளது. இக்கட்டத்தில், VFX கூடிய பிரமாண்ட படத்தை இயக்கிய ஜோதி கிருஷ்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதற்கு பின், நிறைய வெற்றிப் படங்கள் தான் நீங்கள் இயக்க வேண்டும். “ஜோதி இனி பிரகாசமாக இருக்கும், நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ரத்னம் சார்”, என்றார்.

நடிகர் நாசர் பேசியபோது,

நான் முதல் நாள் இப்படத்தின் படப்பிடிப்புக்கு சென்றேன். அப்போது, இப்படத்தின் செட் தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய செட், அதன் பின் மழை வந்தது, கொரோனா வந்தது இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. நான் இந்த படத்தை மறந்துவிட்டேன் என்று கூட சொல்லலாம். ஆனால், 5 ஆண்டுகள் கழித்து இப்படத்தை மீண்டும் தயாரித்து வெளியிடுகிறார் ஏ.எம்.ரத்னம் என்றால் அவரின் துணிச்சலுக்கு பெரும் பாராட்டுக்கள். அந்த தைரியத்திற்கு இப்படம் நிச்சயம் வெற்றி படமாக அமைய வேண்டும். ரத்னம் சாருக்கு பிறகு நான் பாராட்ட வேண்டியது ஜோதியை தான். காரணம், இப்படம் ஆரம்பித்தது வேறு ஒரு இயக்குனர், அதன் பின் அவர் வேறு ஒரு நிலைக்கு சென்று விட்ட காரணத்தால் இப்படத்தை ஜோதி இயக்கினார். இப்படம் இந்த அளவிற்கு வந்துள்ளது என்றால் அதற்கு ஜோதியின் அறிவு தான் காரணம்.

ஜோதி இயக்கத்தில் இப்படத்தின் செட்டுக்கு முதல் நாள் சென்றேன். அப்போது அந்த செட்டில் எதுவும் இல்லை, நான் பயந்தேன். அதற்கு பிறகு இப்படத்தை எப்படி எடுக்கப் போகிறேன் என்று ஜோதி என்னிடம் கூறினார், அது மிகத் தெளிவாக இருந்தது. அப்போதும் அதை அவர் எப்படி சரியாக எடுப்பார் என்ற பயம் இருந்தது. ஆனால் இப்படத்தின் டப்பிங் சென்ற போது நான் ஒவ்வொரு காட்சியையும் வியந்து பார்த்தேன். ஜோதி என்ன சொன்னாரோ அதை செய்து விட்டார். அவருக்கு வாழ்த்துக்கள்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளரா? இல்லை மேஜிசியானா? என்ற எண்ணம் உள்ளது. எப்போதும் நாங்கள் ஒரு கேமராவுக்கு தான் ஷாட் வைத்து நடிப்போம், ஆனால், இப்படத்தில் 6 முதல் 7 கேமராக்களை பயன்படுத்தினார் மனோஜ். எந்த கேமராவுக்கு நடிக்க வேண்டும் என்று எங்களுக்கு குழப்பமாக இருந்தது. இப்படம் பெரும் தடைகளை தாண்டி வந்துள்ளது. ரத்னம் சார் என்னை அழைத்த போதெல்லாம் நான் வெவ்வேறு இடங்களில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்தேன். ஏனென்றால், பவன் ஒரு நாள் நடிக்க வருகிறார் என்றால் நாங்கள் அனைவரும் வந்து விடுவோம், நடிகர் சுனிலும் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்து 2 காட்சிகள் நடித்துவிட்டு மீண்டும் சென்று விடுவார். அந்த அளவிற்கு அனைவரும் உழைப்பை கொடுத்துள்ளோம். நிதி அகர்வாலும் இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *